முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிற்காக டோனியைப் போல் வேறு யாரும் செய்ததில்லை - முன்னாள் கேப்டன் கபில்தேவ் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டோனியைப் போல் இந்தியாவுக்காக வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இவ்வளவு செய்ததில்லை என உலகக்கோப்பையை வென்ற அணி கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

பேட்டால் பதில்...

1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தவர் ஆல்ரவுண்டர் கபில் தேவ். பின்னர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் அப்போதையை கேப்டன் மகேந்திர சிங் டோனி. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என பெருமைக்கு இன்றளவும் சொந்தக்காரராக டோனி இருக்கிறார். 37 வயதாகும் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற பலரின் கேள்விக்கு தனது பேட்டால் பதிலளித்து வருகிறார்.

நன்கு பணியாற்றி...

இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் டோனியும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், டோனியின் உலகக்கோப்பை பங்களிப்பு குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், “டோனி பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நாட்டிற்காக நன்கு பணியாற்றி வருகிறார் என நான் நினைக்கிறேன், அவரை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

எந்த வீரரும் இல்லை...

மேலும், “அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார்? எவ்வளவு காலம் அவரது உடல் ஒத்துழைக்கும் என யாருக்கும் தெரியாது. டோனியைப் போல் நாட்டிற்காக வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இவ்வளவு செய்ததில்லை. அவர் இந்த உலகக்கோப்பையையும் வென்றுகொடுப்பார் என நான் நம்புகிறேன்” என்று கபில் தேவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து