முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்புகைசீட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடில்லி : ஒப்புகைச்சீட்டு விவகாரம் தொடர்பாக 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓட்டுக்களை ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தி உள்ளன. ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறி இருந்தது.

மேலும் ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இம்மாத துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி  செய்திருந்தது.  அத்துடன் 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை  மட்டும் ஒப்பிட்டு பார்த்தால் போதுமானது என கூறியிருந்தது. இந்நிலையில்  எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது   குறிப்பிடத்தக்கது.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து