முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடினுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புடினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா கடந்த சில மாதங்களாக, தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. அமெரிக்காவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு தோல்வி அடைந்ததால், மீண்டும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதித்து பார்த்தது. இதனால், மீண்டும் தனது பழைய பாதைக்கே வடகொரியா திரும்பி விடுமோ என உலக நாடுகள் கவலைப்படும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புடினும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், கிம் ஜாங் அன் ரெயிலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். நீண்ட தூர பயணத்துக்கு பிறகு நேற்று காலை, அவரது ரெயில் ரஷியாவின் பசிபிக் துறைமுக நகரான விளாடிவோஸ்டோக்கில் உள்ள ஹசன் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு அவருக்கு ரஷிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிம் ஜாங் அன்னை சந்திப்பதற்காக விளாடிவோஸ்டோக் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று அதிபர் புடினும் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து