முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போயிங் விமானத்தில் தீ - உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த போயிங் விமானத்தில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

டெல்லி விமானநிலையத்தில் டெல்லியில் இருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ செல்ல ஓடுதளத்தில் போயிங் 777 விமானம் நின்று கொண்டிருந்தது. இந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்த ஏ.சி. பழுதடைந்துள்ளது. ஏ.சி.யை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக பின்பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சிறிது நேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் நடக்கவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்தபோது பயணிகள், விமானிகள் என யாரும் உள்ளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து