முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் புயல் உருவாகிறது: தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வருகிற 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி ,குமரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளது.

நாளை முதல் மழை

இந்த நிலையில் வங்கக்கடலில் தற்போது புயல் சின்னம் உருவாக உள்ளதாகவும் இதனால் நாளை சனிக்கிழமை முதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

இலங்கைக்கு அப்பால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.பின்னர் அது புயலாக மாறும் இந்த புயலுக்கு ஃபானி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை சில நாட்கள் நீடிக்கும். குறிப்பாக செவ்வாய், புதன் நாட்களில் அதி தீவிர மழை பெய்யும்.  இவ்வாறு அவர் கூறினார், இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

இதற்கிடையே கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1- ம் தேதிகளில் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்த இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை மட்டும்தான். அதுவும் மாறுபாட்டிற்கு உட்பட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து