முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை இந்திய அணியில் ரிஷப் தேர்வாகாதது அவருக்கு பெரிய பின்னடைவு இல்லை - முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டோனி காலத்திற்கும் விளையாடிக்கொண்டே இருக்கப்போவதில்லை என்றும் அவருக்கு பிறகு ரிஷப் பந்த் தான் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

காத்திருப்போர்...

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். பின்னர் அவர் உலகக்கோப்பைக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சமீபத்தில் பேட்டி அளித்த போது, டோனியும், தினேஷ் கார்த்திக்கும் காலத்திற்கும் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்க போவதில்லை என்றும், அவர்களுக்கு பிறகு ரிஷப் பந்த் சிறந்த தேர்வு என்றும் கூறினார்.

இன்னும் 15 ஆண்டு...

மேலும் இன்னும் 15-16 ஆண்டுகளுக்கு பந்த் விளையாடுவார் என்பதால் இந்த உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வு செய்யப்படாதது அவருக்கு பெரிய பின்னடைவாக இருக்காது என்றும் கங்குலி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து