முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் திடீர் தீ: இந்திய கடற்படை அதிகாரி பலி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலில் நேற்று ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய லெப்டினன்ட் கமாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று பிற்பகல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்துக்குள் நுழைந்த போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. அங்கிருந்த உபகரணங்களை வைத்து தீயை போராடி அணைத்தவர்களில் ஒருவரான லெப்டினன்ட் கமாண்டர் டி.எஸ்.சவுகான் பலத்த தீக்காயங்களுடன் அருகாமையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து