முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-1 ஏற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,-  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து பாம்பன்,ராமேசுவரம் ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்களுக்கு தெரிவிக்கும் வகையில்  பாம்பன் பகுதியிலுள்ள துறைமுகத்தில்  நேற்று 1 ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டது.
  .இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்தம் இலங்கை திரிகோணமலை கடலோரப்பகுதியில் கிழக்கு தென் கிழக்கு திசைப்பகுதியில் 1140 கி.மீ வேகத்திலும்,சென்னை தென் கிழக்கு கடல் பகுதியில் 1490 கி.மீ வேகத்திலும், ஆந்திரா மாநில்ம் மச்சிலிபட்டிணம் கடல் பகுதியில்  தெற்கு தென்குகிழக்கு கடல் பகுதியில் 1760 கி.மூ வேகத்திலும் காற்றுடன் கூடிய அலை உருவாகி புயல் மையம் கொண்டுள்ளது. ஆதலால் இந்த கடல் பகுதியின் தொடர்ச்சியாக உள்ள தமிழகத்தின் தென் கடலோரப்பகுதியான ராமநாதபுரம் மாவட்டம்  மண்டம்,பாம்பன்,ராமேசுவரம் ஆகிய ஆழ் கடலோரப்பகுதியில் புயல் உருவாகி கரையில் பலத்த காற்றுடன் கூடிய கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது ஆதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 நேற்று ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பாம்பன் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என தடை விதித்து மீன்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.மேலும்  கடல் கரையோர பகுதியில் வசிக்கு மீனவர்கள்,பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து