முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா சவால்

வியாழக்கிழமை, 9 மே 2019      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, என்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும் என பிரதமருக்கு சவால் விடுத்தார்

மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நிலக்கரி சுரங்க ஊழலில் எனக்கு பங்குண்டு என நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும். என் மீதான குற்றச்சாட்டை நீங்கள் நிரூபித்து விட்டால், 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்று விடுகிறேன். அப்படி இல்லையென்றால், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் காதை பிடித்துக் கொண்டு 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். எனது சவாலுக்கு நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து