எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓட்டப்பிடாரம் : மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமல்ஹாசனின் பிண்ணனி குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தூத்துக்குடி தனியார் விடுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது,
ஒரு சமுதாய சீர்கேட்டை உருவாக்கும் வகையில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கமலஹாசன் பேசி வருகின்றார். என்னை பதவி விலக சொல்வதற்கு கமல்ஹாசன் கட்சி ஒன்றும் ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. நான் எங்கும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசவில்லை. இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என்பதை கமல்ஹாசன் எப்படி சொல்லலாம். இலங்கையில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தன் பிள்ளைகள் செத்தால் கூட கவலைப்படுவதில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர். ஒரு மதத்தை கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது. தீவிரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கைக்கும், தமிழகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அங்கு ஒரு பாதிப்பு என்றால் கூட தமிழகத்தில் வலி எடுக்கும். இலங்கையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று கமலஹாசன் கூறியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
சுதந்திரத்துக்குப் பிறகு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழுவும், மகாத்மா காந்தி தலைமையில் ஒரு குழுவும் சேர்ந்து பேசி சுமூக முடிவு ஏற்படும் போது எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர். எத்தனை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இது கமலஹாசனுக்கு தெரியுமா? நமது இரு பிள்ளைகளும் இப்படி கொல்லப்படுகிறார்கள் என்று நினைத்து வாகா எல்லை கண்ணீர் விட்டு அழுதது. இதையெல்லாம் பார்த்து பார்த்து மதக் கலவரங்களும் குறைந்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமலஹாசனின் இந்த கருத்து இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலை. இது போன்ற செயல்களை அவர் செய்யவும் கூடாது. பேசவும் கூடாது. கமலஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் பயங்கரவாதம் முதல் இந்து என்று கூறினார். ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக் கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரு மதத்தையும் சண்டை இழுத்து விட நினைக்கின்றார். கமல்ஹாசனை மத்திய உளவுத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இஸ்லாமியர்களை நான் இப்போது கூட அப்பு மார்கள் என்றுதான் உறவைச் சொல்லி கூப்பிடுவேன். தூத்துக்குடியில் நாலுமாவடியில் மோகன் லாசரை பார்த்து நான் ஆசி பெற்று தான் வந்துள்ளேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய நடத்தும் நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன். கமல்ஹாசன் பேசும் போது யாராவது ஒருவர் நீ பார்த்தாயா என்று தட்டிக் கேட்டிருந்தால் என்னவாயிருக்கும். அங்குதான் தீவிரவாதம் உருவாகி வருகிறது. அங்குதான் பிரச்சினை உருவாகும். கலவரம் உருவாகும். மதவாதத்தை தூண்டி விடும் கமல்ஹாசன் பின்னணியை மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும். ஒரு வேகத்தில் பேசி விட்டேன் என்று கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். யாரையும் துன்புறுத்த வேண்டும். மனது புண்படும்படி பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. மக்களின் கோபங்கள் எப்படி வெளிப்படும் என்பதைத் தான் நான் கூறியிருந்தேன். அவர் திருந்துவதற்காகத்தான் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன். இந்துகள் வருத்தப்பட வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தால் நான் வாபஸ் பெறுகின்றேன். நான் பேசியதை அவருக்கு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவற அராஜகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்து மதத்தை பேசியது போன்று வேற ஏதாவது ஒரு மதத்தை கமல்ஹாசன் இப்படி பேச முடியுமா? இந்துவையும் இந்து மதத்தையும் வம்புக்கு இழுப்பதை சில கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க.வில் சில பேச்சாளர்கள் என அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனும் சேர்ந்து இருக்கின்றார். தேர்தல் வந்தால் திருச்செந்தூரில் சென்று சாமி கும்பிடுகின்றனர். சிவன் கோயில் சென்று சாமி கும்பிடுகின்றனர். திருநீறு, குங்குமம் வைக்கின்றனர். பிறகு எதற்கு யாரை திருப்திப்படுத்த இந்து மதத்தை அவமரியாதையாக பேசுகின்றனர். ஏழைகளுக்கு உதவக் கூடியவர்கள் கடவுள் என்றுதான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. கமல்ஹாசன் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவர் இத்தாலி நாட்டிற்குத்தான் போக வேண்டும். இந்துகளை அவமரியாதையாக பேசி விட்டு அதை ஆதரித்து பேசுவது முட்டாள்தனம். இந்து பெண்கள் புனிதமாக போற்றும் தாலியை அறுத்து வீடியோ வெளியிட்டு வரும் வீரமணி அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் அடக்கி வைக்கும் நிலை ஏற்படும். நான் பேசியது எதையும் சட்டத்திற்கு விரோதமாக பேசவில்லை.. ஒரு மேடையில் சாதாரண ஒருவர் பேசினால் அது பெரிய செய்தியாக வராது. கமல்ஹாசன் நடிகர் என்பதால் அவரது பேச்சு பெரிதாக பேசப்படும். கமல்ஹாசனி தவறான பேச்சை கண்டிக்காவிட்டால் அவர் பேசிக் கொண்டே இருப்பார். என்னிடம் சில இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் பேசினார்கள். என்னுடைய கருத்தை அவர்கள் வரவேற்றனர். எல்லா மதத்திலும் மத ஆர்வலர்கள் இருப்பார்கள். அவர்களை தூண்டிவிடும் வகையில் கமல்ஹாசன் பேசக்கூடாது. நாக்கை நான் அறுப்பேன் என்று கூறவில்லை. நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்றுதான் கூறினேன். கமல்ஹாசனின் பேச்சு நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமூக நல்லிணகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டிவிடும். அதைத்தான் நான் கண்டித்தேன். அமைதியாக நடைபெறும் தேர்தலை மட்டுமல்ல, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் உள்ள கமல்ஹாசனின் பேச்சை அனைவரும் கண்டிக்க வேண்டும். எடப்பாடியார் ஆட்சியில் மதநல்லிணக்கமான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரிவினவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் கமல்ஹாசனின் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். கமல்ஹாசன் தனி வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். அவரைப் பற்றி நிறைய குற்றச்சாட்டு வைக்கலாம். அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் ஒரு அரசியல் பச்சோந்தி. அவரை நம்பி சென்றவர்களை நட்டாற்றில் விட்டு சென்று விடுவார். ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். தற்போது பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்களோடும் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். எந்த எம்.பி. தொகுதியிலும் தி.மு.க. ஜெயிக்க முடியாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.