எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூலூர் : நாட்டின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து விட்டு சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
உற்சாக வரவேற்பு...
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டு நேற்று சூலூர் சென்றார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் பேசியதாவது,
நிறைவேற்ற முடியாது...
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். பொய்யான அறிவிப்புகளை வெளியிடுகிறார். இப்போது நடப்பது இடைத்தேர்தல். பொதுத் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு. ஆனால் இடைத்தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. எனவே மக்களை ஏமாற்ற இப்படி அறிவிப்புகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்.
மின்மிகை மாநிலமாக...
2011-ல் புரட்சித் தலைவி அம்மா தேர்தல் பிரச்சாரம் செய்த போது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார். சொன்னபடி அவற்றை மக்களுக்கு கொடுத்தார் அம்மா. தி.மு.க. ஆட்சியின் போது மணிக்கணக்கில் மின்வெட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அந்த நிலைமையை சீர்படுத்தி தடையில்லா மின்சாரத்தை வழங்கினார் அம்மா. மேலும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக ஆக்கினார். இப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் அம்மா. ஆனால் கருணாநிதி 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார். சொன்னபடி கொடுத்தாரா? எனவே மக்கள் இந்த விஷயத்தில் ஏமாறக் கூடாது.
ரகசிய உடன்பாடு...
இன்னொருவர் இங்கு வந்து வாக்கு கேட்டு விட்டு போயிருக்கிறார். அவர்தான் டிடிவி தினகரன். கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டவர். இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தவர். கட்சிக்கும், ஆட்சிக்கும் பல நெருக்கடிகளை கொடுத்தவர். ஆனால் அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. அதனால் இப்போது தனியாக கட்சியை ஆரம்பித்து விட்டார். நமது வேட்பாளர் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்திருக்கிறார். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன். ஆனால் இந்த இயக்கத்திற்கே துரோகம் செய்ய நினைக்கிறார். அவருக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
வெளியே எதிரி, உள்ளே உறவு
தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ஒன்றுதான். இவர்கள் வெளியில்தான் எதிரி. உள்ளே இவர்களுக்குள் உடன்பாடு இருக்கிறது. கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. மக்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த இயக்கம். ஆனால் தி.மு.க. குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அ.தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டனும் உயர்ந்த நிலைக்கு வரலாம். அதற்கு நானே ஒரு சாட்சி. தி.மு.க.வில் இது முடியுமா? அம்மா மறைந்த பிறகு முதல்வர் நாற்காலியில் அமர மு.க. ஸ்டாலின் துடித்தார். ஆனால் அது முறியடிக்கப்பட்டு விட்டது. மக்களுக்கு நன்மை செய்யாமல் எந்தவொரு இயக்கமும் வெற்றி பெற முடியாது. மக்கள் எங்கள் பக்கம். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம். ஒரு ஆங்கில இதழ் நடத்திய ஆய்வில் அது நிரூபிக்கப்பட்டு தமிழகத்திற்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சந்தித்தது ஏன்?
தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா சென்னையில் நடந்த போது அந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது யாரையும் கேட்காமல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதை மறுத்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரபாபு நாயுடு. இப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறார். பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்த ஸ்டாலின், சந்திரசேகர ராவை சந்தித்தது ஏன் ? கேட்டால் 3-வது அணி அமைப்போம் என்கிறார்கள்.
நீங்கள் ஜெயித்தால்தானே, அமைக்க முடியும். 23-ம் தேதி முடிவு தெரிந்து விடும். அந்த தீர்ப்பு ஏற்கனவே மக்களால் எழுதப்பட்ட தீர்ப்பு. ஆகவே ஸ்டாலின் கனவு பலிக்காது. மக்களுக்காக எந்த திட்டத்தையும் தி.மு.க. கொண்டு வந்தது இல்லை. எனவே நமது வேட்பாளர் கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் வேட்பாளர் கந்தசாமி ஆகியோர் வேனில் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.