எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் அட்டுழியம் செய்யும் தினகரனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் உள்ளிட்ட அக்க்டசியின் வழக்கறிஞர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனுவொன்றை அளித்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விதிகளுக்கு மாறாக...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் நேற்று மாலை, சூலூரில் டிடிவி தினகரன், அவருடைய அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசுகின்றபோது, தினகரன் தேர்தல் விதிகளுக்கு மாறாகவும், தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிமுறைகளுக்கு எதிராகவும், முதல்வரையும் துணை முதல்வரையும் தனி நபர் தாக்குதலும், விமர்சனமும் செய்து முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் ஒருமையில் பேசி தன்னுடைய வேட்பாளருக்கு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
தீர்ப்பை விமர்சனம்...
மேலும் நீதிமன்றங்களை விமர்சிக்கின்ற விதமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை, காவிரி மேலாண்மை வாரிய வழக்கு, சென்னை - சேலம் 8 வழிச் சாலை வழக்குகளை விமர்சிக்கின்ற விதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற விதமாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தன்னுடைய வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதாகக் கருதி நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது முழுவதுமான தேர்தல் நடத்தை விதிமீறல் மட்டும் அல்லாது, நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது நீதிமன்ற காவலில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும், உச்சநீதிமன்றம் தவறான தண்டனையை சசிகலாவிற்கு வழங்கிவிட்டது என்பதைப் போலவும் ஒரு பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகின்றார். இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்க உரிய குற்றமாகும்.
ரத்து செய்ய வேண்டும்....
மேலும், 13ம் தேதி மாலை சூலூர், பிரதான சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற மருத்துவ அவசர ஊர்திக்கு வழிவிடாமலும், அதில் உயிருக்கு போராடிக்கொண்டு செல்லும் நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாகவும், ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே "அதில் ஆள் இருக்கிறார்களா" என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாது, சிறிது நேரத்தில் வந்த மற்றொரு மருத்துவ அவசர கால ஊர்திக்கு வழிகொடுக்காமல் அந்த வாகனம் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர கால ஊர்திக்கு அவசரமாக வழி தர வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் அந்த நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாக "வண்டியில் ஆள் இருக்காங்களா பாருங்க" என பேசும் தினகரனின் பிரச்சாரத்திற்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
நடவடிக்கை எடுக்க...
எனவே, தலைமைத் தேர்தல் அதிகாரி தனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டும், முதல்வரையும், துணை முதல்வரையும் ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும், நீதிமன்றத் தீர்ப்புகளை தொடர்ந்து விமர்சனம் செய்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் நோயாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கும் தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.