முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்: டோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு: குல்தீப் யாதவ்

புதன்கிழமை, 15 மே 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : தான் டோனி மீது மரியாதை வைத்திருப்பதாகவும், யாரைப்பற்றியும் தான் எதுவும் கூறவில்லை எனவும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
பேசமாட்டார்...

விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், போட்டியின் போது வழக்கமாக டோனி கொடுக்கும் ஆலோசனைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த குல்தீப், ''டோனி தேவையில்லாமல் மைதானத்திற்குள் பேசமாட்டார். ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடையே பேசுவார். அப்போது அவர் சில டிப்ஸ் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று தெரிவித்ததாக செய்தி பரவியது.

புதிய சர்ச்சையை...

டோனி எடுக்கும் முடிவுகள் பல ஆட்டங்களில் வெற்றியை தேடி தந்திருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் குல்தீப் யாதவ் இவ்வாறு கூறினாரா என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சர்ச்சை குறித்து குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  எந்தக் காரணமும் இல்லாமல் வதந்தியை கிளப்பி ஊடங்கள் புதிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கின்றன. அதனை சிலர் வேகமாக பரப்பி வருகின்றனர். நான் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு. நான் யார் குறித்தும் எதுவும் பேசவில்லை. டோனி மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முற்றுப்புள்ளி...

டோனி குறித்து கருத்து கூறியதாக குல்தீப் யாதவ் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் அவர்  தற்போது அளித்துள்ள விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து