முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. ரசிகையின் வேதனை

புதன்கிழமை, 15 மே 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு மைதானத்தில் மே 4-ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆர்.சி.பி - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியின் போது கேமிராவில் சில வினாடிகள் காண்பிக்கப்பட்ட சிகப்பு பனியன் அணிந்த பெண் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார். பெங்களூரு அணி இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை விட பிரபலமாக பேசப்பட்டவர் தான் சிகப்பு பனியன் அணிந்த அந்த பெண். போட்டியின் போது பெங்களூரு அணியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார். அவரது சுட்டித்தனமும், வசிகரமான தோற்றத்தையும் சில வினாடிகள் தான் கேமிராவில் காண்பித்தார்கள். அதுவே ஒரே நாளில் மிகவும் அவரை பிரபலமடைய செய்துவிட்டது.

ஒரே நாளில் லட்சகணக்கான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைப் பெற்றார். #theRCBgirl என்ற ஹஸ்டேக்கில் இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் இணையம் முழுவதும் வைரலாகி தலைப்புச் செய்தியாக மாறினார். இதுவே இவருக்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது. இணையத்தில் சில விஷமிகள் இவரை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் மிகவும் பிரபலமானவர் ஒன்றும் இல்லை. எல்லோரையும் போல் ஒரு சாதாரணப் பெண் தான். கேமரா என்னை பதிவு செய்ய வேண்டுமென்பதற்காக நான் எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை. சாதாரண ரசிகையாக  தான் அவர்கள் என்னை காண்பித்தார்கள்.

என்னுடைய பெயர், சுயவிவரங்களை உடனடியாக எப்படி மற்றவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று எனக்கே குழப்பமாக உள்ளது. எனது விவரங்களை உடனடியாக சிலர் ஹேக் செய்துள்ளார்கள் என தோன்றுகிறது. ஒரே நாளில பல லட்சம் பேர் என்னை சமூகவலைதளங்கில் ஃபாலோ செய்தனர். இதில் பலர் என்னை கெட்டவார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சிகின்றனர். பெண்களிடமிருந்து கூட எனக்கு எதிர்ப்பு வருவது தான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

இவர்களுடைய இந்தச் செயல் மிகப் பெரிய தவறான ஒன்றாகும். எனக்கு இது மிகப்பெரிய மனஉளைச்சலை கொடுத்துள்ளது. ஒரு பெண் வைரலாவது தவறா? ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து