முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை....

வெப்பச்சலனத்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேகமூட்டத்துடன்...

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாக கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து