முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி தியானம்

சனிக்கிழமை, 18 மே 2019      இந்தியா
Image Unavailable

கேதார்நாத் : உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இன்று வரை அவர் தியானம் மேற்கொள்கிறார்.

முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொள்வார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில்  தங்கும் அவர் இன்று அங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் சென்று மாலையில் மீண்டும் அவர் டெல்லி திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து