முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி களத்திற்கு வந்தாலே எதிரணியினருக்கு பிரச்னை தான் - நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் தகவல்

திங்கட்கிழமை, 20 மே 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டோனி களத்திற்கு வந்தாலே எதிரணியினருக்கு பிரச்னை தான் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

30-ம் தேதி தொடக்கம்...

உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் டோனி குறித்து பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் பேசியுள்ளனர்.

பேட்டிங் சிறப்பு...

டோனி பற்றி மெக்கல்லம், ‘இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர் டோனி. ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூப்ரின்ட்டை வைத்திருப்பார். அவர் களத்திற்கு வரும் போது எதிரணியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்திவிடுவார்’ என்று கூறியுள்ளார். மேலும் சமீபகாலமாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அது உலகக்கோப்பை தொடருக்கு உதவியாக இருக்கும் என்று மெக்கல்லம் கூறியுள்ளார்.

டோனிக்கு தெரியும்...

இதே போல் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், ‘டோனியின் அமைதி போட்டியின் போது தனக்கு முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள அவருக்கு உதவுகிறது. எந்த மாதிரி சூழ்நிலையாக இருந்தாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது டோனிக்கு தெரியும்’ என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து