முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உதகை மலையில் பயணம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      தமிழகம்
Image Unavailable

ஊட்டி : தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுலா பயணிகளுடன் உதகை மலையில் பயணம் மேற்கொண்டார்.

உதகை 123-வது மலர் கண்காட்சி தொடக்க விழாவிற்கு வந்த அவர், உதகையில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மலை ரயிலில் பயணம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பிற்பகல் செல்லும் மலை ரெயிலில் குன்னூரில் வெலிங்டன் ரயில் நிலையத்தில் இருந்து அவர் குடும்பத்துடன் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ரயில் நிலையத்துக்கு வந்த ஆளுநரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சண்முகபிரியா ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து