முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட லீக் சுற்று பெங்களுரு, சென்னை அணிகள் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாக்-அவுட் சுற்றில் பெங்களுரு பேங்க் ஆப் பரோடா, செகந்திராபாத் ஏ.ஓ.சி, சென்னை இந்தியன் வங்கி, புதுடெல்லி ரெட் இந்தியதரைப்படை அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. 19ம் தேதி முதல் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை நடைபெற்ற லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் பெங்களுரு பேங்க் ஆப் பரோடா அணியும், ஏ.ஓ.சி செகந்திராபாத் அணியும் மோதின. இதில் பெங்களுரு அணி 103-68 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், இந்திய தரைப்படை (ரெட்) அணியும் மோதின. இதில் சென்னை இந்தியன் வங்கி அணி 79-68 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மண்டல ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா அவர்களுக்கு விளையாட்டு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 21ம் தேதி இறுதி லீக் சுற்றின் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து