முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: சிறிசேனா

வியாழக்கிழமை, 23 மே 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை அந்நாட்டு அதிபர் சிறிசேனா மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடந்த தாக்குதல் சம்பவத்தில்  258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையின் வடபகுதியில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நேரிட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா கடந்த 23-ம் தேதி அமல்படுத்தினார். இந்த அவசர நிலையை தற்போது மேலும் ஒரு மாதத்துக்கு சிறீசேனா நீட்டித்துள்ளார். இது தொடர்பாக சிறீசேனா பிறப்பித்துள்ள உத்தரவில், பொது மக்களின் பாதுகாப்புக்காக, அவசர நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து