முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரின் பிறந்த நாள் விழா நகராட்சி சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் -   மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரின் பிறந்த நாள் விழா நகராட்சி சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாளை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கிய நகராட்சி ஆணையாளர் முருகேசன் விரைவில்  சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக சுமார் 60 கோடி ரூபாயில் யாத்ரிகா நிவாஸ் திட்டம்செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
கொடைக்கானல் நகர் கண்டுபிடிக்கப்பட்டு 174 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. இதனையொட்டி 174 வதுபிறந்தநாள் நகராட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் முருகேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் குமார்சிங், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, சமூக ஆர்வலர்கள் மகேந்திரன், ரவிக்குமார், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து நகராட்சி ஆணை யாளர் முருகேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. நகரின் 174 வது பிறந்த நாளில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .அடுத்த ஆண்டிற்குள் ஏரியின் அருகே உள்ள கலையரங்கத்தில் தனியார் பங்களிப்புடன் சுமார் 65 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக யாத்திரிகா நிவாஸ் என்ற  தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. அத்துடன் அதே பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்  அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.நகரில் உள்ள முக்கிய சாலைகளை உடனடியாக சீரமைக்க 1 1/2 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும். மேலும் அனைத்து சாலைகளையும் நிரந்தரமாக சீரமைக்க சுமார் 90 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வாகன நுழைவு இடத்தில் நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏரிச்சாலையில் உள்ள கழிப்பறைகள் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல நகரில் உள்ள பல்வேறு கழிப்பறைகள் தனியார் பங்களிப்புடன் நவீனமாக்கப்பட உள்ளது. மேலும் செயல்படாமல் உள்ள செயற்கை நீரூற்றுகள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பட தொடங்கும் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து