முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயா மாநிலத்தில் மரணம் அடைந்த திருமங்கலம் பகுதி ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்:

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம். -மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேகாலயா மாநிலத்தில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது.
 .திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் மாரீஸ்வரன்(31).இவர் கடந்த 2008ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிய இவர் தற்போது மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 15 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது கடந்த 24ம் தேதி திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது .உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டார் என்று தெரிந்தது. இதை தொடர்ந்து அவருடைய குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் மதுரை வந்த இவருடைய உடல் சொந்த ஊரான சிவரக்கோட்டைக்கு வந்தடைந்தது. அப்போது ராணுவ தீரரின் உடலுக்கு உறவினர்களும் கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து  ராணுவ வீரர் மாரீஸ்வரன் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.உடல் தகனம் செய்யப்பட்ட போது பெண்கள் ஆண்கள் அனைவரும் சுடுகாட்டிற்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இவருடைய உறவினர்கள் கூறுகையில் மாரீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து