முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானாமதுரை அருகே அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      சிவகங்கை
Image Unavailable

மானாமதுரை,-  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள  குறிச்சி கிராமத்தில் வழிவிடு பெரியநாச்சி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.இவ்வாலயத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரச மரம் மற்றும் வேப்ப மரம் இணைந்து காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வறட்சி நிலவுகிறது எனவே மழை வேண்டி அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு பட்டு புடவை உடுத்தி மற்றும் 21 வகையான மூலிகைகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கொண்டு வந்த திருமாங்கல்யம் மூலம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கு திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது இதில் சிவகங்கை மற்றும்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து