முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறை தலைவர் முனைவர் சத்தியமூர்த்திக்கு பாவேந்தர் நினைவு விருது

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      மதுரை
Image Unavailable

சென்னை, -மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறை தலைவர் முனைவர் சத்தியமூர்த்திக்கு பாவேந்தர் நினைவு விருது வழங்கப்பட்டது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இமயம் கலை அறிவியல் கல்லூரி,
அமிர்தாலயா கல்வியியல் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பாவேந்தர் பாரதிதாசனின் 129 -வது பிறந்த நாள் விழாவை மதுரை காமராசர் பல்கலைக் கழக பரிதி பதிப்பகம் சென்னை ஜோலார்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி நடத்தியது. 
இந்த நிகழ்ச்சியில் பாவேந்தர் விழா மற்றும் பாவேந்தரின் படைப்புகள் பன்முகப் பார்வை என்னும் பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இலக்கியப் பணிகளைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக் கழக தமிழியல் துறை தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்திக்கு பாவேந்தர் நினைவு விருதினை சென்னை மாவட்ட கலெக்டர் தனவேல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கலெக்டர் தனவேல், பாடலாசிரியர் அறிவுமதி, பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் கோ.செல்வம், கவிமாமணி தி.மு.அப்துல் காதர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து