முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது குழந்தைக்கு வாக்குரிமை ரத்து: புதிய சட்டம் இயற்ற ராம்தேவ் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
Image Unavailable

ஹரித்வார் : மக்கள் தொகையை கட்டுப்படுத்த மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாபா ராம்தேவ் கூறுகையில்,

இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என சட்டம் கொண்டு வர வேண்டும். அரசின் பிற சலுகைகளையும் பறிக்க வேண்டும். அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறுவதை நாம் தடுக்க வேண்டும். தற்போது எந்த வாக்காளர்களும் அரசு அளிக்கும் சலுகைகளை முழுமையாக பெற முடியவில்லை. இவ்வாறு சட்டம் கொண்டு வந்தால் மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க மாட்டார்கள். அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. எல்லா நாடுகளும் மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளால் முடியும் போது இந்தியாவில் ஏன் தடை செய்ய முடியவில்லை. இது முனிவர்கள் வாழ்ந்த பூமி. இந்தியாவில் மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து