முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் மக்களை பிரித்தாள பா.ஜனதா முயற்சி - மம்தா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மக்களை பிரித்து ஆள பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் நேற்று அந்த கட்சியின் சார்பில் நைஹட்டியில் ஏற்பாடு செய்து இருந்த பேரணியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பா.ஜனதா போன்ற கட்சியை நான் ஆதரிக்கப் போவதில்லை. அவர்கள் மாநிலத்தில் உள்ள மக்களை மொழி அடிப்படையில் பிரித்து ஆள முயற்சி செய்கிறார்கள். 

சில போலீஸ் அதிகாரிகளும் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து