முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் பதவிக்கு டிசம்பர் 7-க்குள் தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் நடத்தப்படும் என்று அந்நாட்டு தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது. 
 
இலங்கை அதிபராக மைத்ரியபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ராஜபக்சேவை வீழ்த்தி இலங்கை அதிபரானார். சிறிசேனாவுக்கு 51.28 சதவீத ஓட்டுகளும், ராஜபக்சேவுக்கு 47.58 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் 5 வருட பதவி காலம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 8-ந்தேதியுடன் முடிவடைகிறது.

அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இலங்கை அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இலங்கை அதிபர தேர்தல் தொடர்பாக அந்நாட்டு தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் நடத்தப்படும் என்று அந்நாட்டு தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் சேர்மன் மகிந்தா தேஷ்பிரியா  கூறியதாவது:-

இலங்கை அதிபரின் பதவி காலம் முடிவதற்கு 1 மாதத்திற்கு முன்பு இலங்கை அதிபர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும். நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து