முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கடை ஷட்டரை உடைத்து 2 இலட்சம் செல்போன் கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கடை ஷட்டரை உடைத்து 2 இலட்சம் பெறுமான செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம்       நிலக்கோட்டை அருகே      வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 33) இவர் நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் வளாகத்தில் மாடியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.    இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று நேற்று காலை சுமார் 10 மணி அளவில் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கதவைத் திறந்து பார்த்தபோது சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் அதனுடன் சேர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தது.  தகவலறிந்த நிலக்கோட்டை. போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடதத்தினார்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் கைரேகை நிபுணர் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் தலைமையில் கைரேகை நிபுணர்கள்  செல்போன் கடையில் ஆய்வு செய்தனர்.  போலீஸ் நிலையம் அருகாமையிலேயே கொள்ளை நடந்திருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 5ம் தேதி காவல்நிலையத்திலிருந்து 600 மீட்டர் தூரத்தில் மெயின்ரோட்டிலுள்ள டாக்டர் மகன் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் 7 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் நிலக்கோட்டை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். போலீஸ் தனிப்படை அமைத்து விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து