முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காள சம்பவங்கள்: விளக்கம் கேட்கும் மத்திய அரசு

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்காள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. 

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர். இதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.  மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

இதேபோல் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவருகிறது. இதன் எதிரொலியாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக பெண் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 160 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்துவரும் அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று  கடிதம் அனுப்பியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து