எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : முல்லைபெரியாறு, காவிரி, போன்றவற்றில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. என்றும், போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வரும் அம்மாவின் அரசை விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி முன்னிலை வகித்தார், ஜமாபந்தி நிகழ்ச்சியில் 400 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், ஒன்றிய செயலாளர்கள் பிச்சைராஜன், ராஜா, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர் செயலாளர் பூமாராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
வருவாய்த் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாக இருந்ததை ஒரு சாதனை நிகழ்ச்சியாக நாம் நடத்தி வருகிறோம். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாகவே 32 மாவட்டங்களில் வறட்சியான காலங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம், முதல்வர் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டார். அதில் வறட்சியான காலங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக குக்கிராமங்களிலும் குடிநீர் பிரச்சனையை போக்கும் வண்ணம் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் முதற்கட்டமாக ரூ. 262 கோடி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் குடிநீர் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
முன்பெல்லாம் 400 அடிகள் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 1000 அடிக்கு மேல் ஆழ்துளை குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளில் விவசாயிகளின் அனுமதி பெற்று அதில் இருக்கும் நீரை லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவும், அதே போல் ஏரி, கண்மாய்களில் நீர் இருந்தாலும், குவாரிகளில் நீர் இருந்தாலும் அதை சுத்திகரித்து முழுவீச்சில் மக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் பருவமழை பெய்யாததால் ஏரி, கண்மாய்களில் நீர் வறண்டு இருந்தும் அதிலிருந்து மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வரும், துணை முதல்வரும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அமைச்சர்களையும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதே உசிலம்பட்டி பகுதியில் 58 கால்வாய் திட்ட பணியை முழுமைபடுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக அம்மா அரசு கொண்டு வர உள்ளது. உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு ரூ. 51 கோடியில் கூட்டு குடிநீர்த்திட்டம் செயல்பட உள்ளது. ஆனால் இந்த அம்மா அரசின் மீது வாய்கூசாமல் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தவறிய அரசு என்று ஸ்டாலின் உளறி வருகிறார். மக்களாகிய உங்கள் முன்பு ஸ்டாலினுக்கு கேள்வி கேட்கின்றேன். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரியையும், முல்லை பெரியார் பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது யார், காவிரி பிரச்சனையை இன்றைக்கு அம்மா வழியில் சென்று போராடி காவிரி மேலாண்மை ஆணையத்தை முதல்வரும், துணை முதல்வரும் அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உள்ளனர். அதே போல் முல்லை பெரியாரை அம்மா மீட்டு தந்தார். அதன் மூலம் கோடி கணக்கான விவசாயிகளை காப்பாற்றியது அம்மாவின் அரசு. தென் மாவட்டத்தின் 50 லட்சம் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அம்மாவின் அரசாகும். இந்த அரசைப்பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது.
மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நதிநீர் இணைக்கப்படும். அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சமே வராது என்று கூறியுள்ளார். அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். தொலைநோக்கு திட்டமான கங்கை, கோதாவரி நதி இணைப்புத் திட்டத்தில் வைகை நதியையும் இணைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த நதிகள் இணைப்பின் மூலம் எப்பொழுதும் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் வராது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.