முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.   

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட பிட்ரூ அக்கிங்கம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை  நேற்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் காயமடைந்ததாகவும் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து