எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் வரை...
தமிழகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சென்னை மாநகரில் இன்றைய தேதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் நீர் இருப்பு 26 மில்லியன் கன அடி அளவே உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தினசரி 543 மில்லியன் கன அடி நீர் பெறப்பட்டு மாநகர குடிநீர் விநியோகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகருக்கு தினமும் ஜூலை 1-ம் தேதி முதல் நவம்பர் 2019 மாதம் வரை மழை பொழிவு இல்லாவிடினும், நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டர் குடிநீரும், வீராணம் ஏரியிலிருந்து 90 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி சுரங்கத்திலிருந்து 60 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி பகுதியில் ஏற்கனவே உள்ள 22 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், இதே பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 9 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 10 மில்லியன் லிட்டர் குடிநீரும் , திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் 110 மில்லியன் லிட்டர் குடிநீரும், மாகரல் - கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட்ட 13 ஆழ்துளை கிணறுகள் மூலம் 15 மில்லியன் லிட்டர் குடிநீரும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், ரெட்டை ஏரி மற்றும் எருமையூர் கல்குவாரி ஆகியவற்றிலிருந்து 2 மாத காலத்திற்கும், அதன் பின்னர் செப்டம்பர் 2019 முதல் நவம்பர் 2019 வரை அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரிகளிலிருந்து தலா 10 மில்லியன் லிட்டர் வீதம் மொத்தம் 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், ஆக மொத்தம் நவம்பர் 2019 மாதம் முடிய 525 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும்.
குடிநீர் வழங்க நடவடிக்கை
தமிழகத்தில் குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம்.
எதிர்கட்சிகள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வீண் வதந்திகளை பரப்பக் கூடாது. சென்னை மாநகரில், குடிநீர் விநியோகப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் 1 கண்காணிப்பு பொறியாளர், 1 செயற்பொறியாளர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படும். மேலும், 3 மண்டலங்களுக்கு ஒரு தலைமை பொறியாளர் வீதம் இக்குழுக்களின் பணிகளை தினமும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உடனுக்குடன் நிவர்த்தி...
பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும், இரு மண்டலங்களுக்கு ஒருவர் வீதம் 15 மண்டலங்களிலும், காலை 6 மணி முதல் குடிநீர் விநியோகப் பணிகளை பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்வார்கள். சென்னை மாநகரில் 200 வார்டுகளிலுள்ள பணிமனை பொறியாளர்களின் குடிநீர் விநியோக பணிகளை கண்காணிக்க கைசால் ஆப் என்ற செயலி மூலம் அவர்கள் ஆய்வு செய்யும் இடம், நேரம் போன்றவை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். சென்னை குடிநீர் வாரியத்தில், குடிநீர் மற்றும் அனைத்து விதமான புகார்களை தெரிவிக்க சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேண்டுகோள்...
ஊராட்சிகளைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் புகாருக்கென தனி செயலியும், கட்டணமில்லா தொலைபேசியும் உருவாக்கப்படும்.
இச்செயலிகள் வழியாக குடிநீர் பற்றிய புகார்கள் மட்டும் பெறப்பட்டு, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து புகார்தாரருக்கு பதில் அளிக்கப்பட வேண்டும். மேலும், கட்டணமில்லா தொலைபேசி மற்றும் தனி செயலியில் பெறப்படும் குடிநீர் பற்றிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிநீர் பயனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூங்கா, செடிகொடிகள், மரங்கள் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது. பொதுக் குழாய்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குளியல் தொட்டிகள் மற்றும் ஷவரில் குளித்து தண்ணீர் வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்படவில்லை...
குடிசைப் பகுதிகளிலும், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
தனியார் உணவகங்கள் தங்கள் தண்ணீர் தேவையை மெட்ரோ வாட்டர் குடிநீர் குழாய் இணைப்பு மூலமும் மற்றும் தனது சொந்த ஏற்பாட்டின் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஐ.டி. ஊழியர்கள் அவர்களது இல்லத்தில் இருந்தே பணியாற்றும் வசதியை ஆரம்பம் முதலே பெற்றுள்ளனர்.
சென்னை பெருநகரில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எந்த ஒரு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்கம் பாதிக்கப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கி வருகிறது. சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை.
7,300 மில்லியன் லிட்டர்...
அம்மாவின் நீர்மேலாண்மை திட்டங்களால் 2011 முதல் 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில், குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 21,988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 15 ஆயிரத்து 838 கோடியில் குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொண்டது. அதன் காரணமாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 7,300 மில்லியன் லிட்டர் குடிநீர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டதை விட 2400 மில்லியன் லிட்டர் கூடுதலாகும்.
சென்னையில் குடிநீர் தேவையை தெரிந்து கொள்ளாமல் சென்னை நகருக்கு மட்டும் 7 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதாக தெரிவித்துள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
தெளிவுபடுத்தியுள்ளோம்...
கடும் வறட்சியினால் சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகள் வறண்ட நிலையிலும் நவம்பர் இறுதி வரை தற்போது வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை பல்வேறு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் செய்தி வாயிலாக நானும், துறை அதிகாரிகளும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த உண்மை நிலை தெரிந்தும் இது போன்ற இயற்கை பாதிப்பின்போது பொதுமக்களுக்கும், அரசுக்கும் உதவும் வகையில் மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்குவர். மாறாக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை அரசியலாக்கி, பொதுமக்களுக்கு பீதியை உருவாக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்18 hours 39 sec ago |
பெப்பர் சிக்கன்4 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 18 hours ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.