முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியல்: அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும்: ஐ.நா. தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என ஐ. நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. வரும் 2050-ம் ஆண்டில் இந்த தொகை 970 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2019 மற்றும் 2050-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவில் மக்கள்தொகை 3 கோடி அளவில் குறையும் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் மக்கள் தொகை உயர்வு வழக்கம் போலவே இருக்கும். இதனால் உலக மக்கள் தொகையில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா. எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து