முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் எம்.பி. பிர்லா தேர்வு செய்ய வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க. மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி உள்ள நிலையில், சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், 57 வயதான பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா,  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்படும்பட்சத்தில், மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால், அவர் எளிதில் வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வு செய்யப்படுவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓம் பிர்லா மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை எம்.பி.யாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில் தான் சபாநாயகர் பதவி வழங்கப்படும். ஆனால், ஒரு முறை மற்றும் இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவர்களும் சபாநாயகர் பதவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து