முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கக்கன் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு கலெக்டர் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

 மதுரை,- தியாகசீலர் கக்கன் அவர்களின் 110வது பிறந்ததினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் தும்பைப்பட்டியிலுள்ள தியாகசீலர் கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (மு.கூ.பொ.)  எஸ்.சாந்த குமார்  , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  .வி.வி.இராஜன்செல்லப்பா   மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்  ஆகியோர்  மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 விடுதலைப் போராட்ட தியாகியாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய தியாகசீலர் கக்கன் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் தியாகசீலர் கக்கன் அவர்களுக்கு தும்பைப்பட்டியில் மணிமண்டபம் அமைத்து, தலைவர்களுடன் உள்ள அவரது புகைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது தொண்டினை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது.  தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் மணிமண்டபம் நாள்தோறும் திறந்து வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவரது தியாகம் குறித்து விளக்கி கூறப்பட்டு வருகிறது.
 இந்நிகழ்ச்சியில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகாமி அவர்கள், மேலூர் வட்டாட்சியர் திரு.சிவகாமிநாதன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ச.தங்கவேல் அவர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) திரு.வா.பெ.வினோத் அவர்கள், தியாகசீலர் கக்கன் அவர்களின் சகோதரர் வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து