எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது. இதனையடுத்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் கூறியதாவது:
வீரர்களின் சார்பில் ஊடகங்களிடம் கோரிக்கை ஒன்றை விடுக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாரையும் மோசமாக நடத்தக் கூடாது. அது சரியானதும் அல்ல. இப்போது ரசிகர்கள் பேசுவதை கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக நான் விளக்கம் தருவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
_________________________
பாக். வீரர்களை திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!
உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது, மோசமான ஃபீல்டிங், பேட்டிங்கில் ஏமாற்றம் என பாகிஸ்தான் அனைத்திலும் சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பொறுப்பற்ற விளையாட்டே தோல்விக்குக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி உடனான போட்டிக்கு முன் சோகிப் மாலிக், சானியா மிர்சா உடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்கள் வாகப் ரியஷ், இமாம்-உல்-ஹக் ஆகியோர் இரவு பார்டிக்கு சென்றதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மான்செஸ்டரில் உள்ள பிரபல விடுதியில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்ததாக அந்தநாட்டு ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். சானியா மிர்சாவுடன் பார்டிக்கு வந்த சோகிப் மாலிக் ஹூக்கா(Hookah) புகைத்ததை பார்த்தாக ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பீட்சா, பர்கர் போன்ற உணவை எடுத்துகொண்டாக கூறினார். இந்தப் பார்டி இரவு 2 மணி வரை நடந்தாக ரசிகர்கள் பலர் இணயைத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பார்டியில் கலந்து கொண்டது வெட்கடப்பட வேண்டிய செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.
____________
துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்
கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த கூடைப்பந்து அணி, என்பிஏ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டொரன்டோ நகரில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் அணிவகுத்து சென்றனர். இந்நிலையில், நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகே உள்ள பே அண்ட் ஆல்பர்ட் தெருக்களில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது இரண்டு தெருக்களிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, அருகில் உள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடைப்பந்து அணிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ கலந்துகொண்டார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
____________
பாக். ரசிகருக்கு ஆறுதல் கூறிய நடிகர் ரன்வீர் சிங் !
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக ஏழுமுறை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டியினை காணவந்த அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவருக்கு போட்டியினை காணவந்த இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகரை கட்டி அணைத்து, “உங்கள் நாட்டு அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிக நுட்பமாகவும் விளையாடினர். ஆகையால் நம்பிக்கையினை இழக்க வேண்டாம் எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது” என ரன்வீர் சிங் ஆறுதல் கூறுகிறார்.
____________
வங்காள தேச கேப்டன் புகழாரம்
உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 322 ரன் இலக்கை எடுத்து வங்காளதேசம் அதிர்ச்சி கொடுத்தது. இதில் வெற்றியும் பெற்றது. வங்காளதேசம் பெற்ற 2-வது வெற்றியாகும். வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் மோர்தாசா கூறியதாவது:- முஷ்டாபிஜூர் ரகுமான் ஒரே ஒவரில் 2 விக்கெட் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்புமுனை. இதனால்தான் வெஸ்ட்இண்டீஸின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
ஷாகிப் ஹசன் எங்கள் பேட்டிங்கில் முக்கியத்துவம் பெற்றவர். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் ரன்களை குவித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக லிட்டோன் தாஸ் விளையாடினார். ஷாகிப் அல் ஹசன் ஒரு அபூர்வமான வீரர். அவரைப்போல மற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
____________
களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன் - விஜய் சங்கர்
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடியதாலேயே அணிக்கு சிறப்பான பங்களிப்பை தர முடிந்தது என இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய அவர், தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
மேலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்நிலையில் இப்போட்டி குறித்து தெரிவித்த விஜய் சங்கர், பந்துவீச தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். களச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை உடனடியாக தயார்படுத்திக்கொண்டதாலேயே தன்னால் சிறப்பாக செயல்படமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
___
ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கைது
பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த மைக்கேல் பிளாட்டினி (வயது 63) ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2007-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010-ல் பிபா-வால் நடத்தப்பட்டது.
அப்போது தனது பதவியை பயன்படுத்தி 2022-ல் கத்தார் உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெறுவற்காக மறைமுகமாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி இன்று பிரான்ஸில் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
___________
பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது. இது குறித்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சானியா, நான் உங்கள் குழந்தையை நினைத்து உண்மையில் வருந்துகிறேன். உங்கள் குழந்தையை ஷிசா பேலஸ் போன்ற துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் சென்று இருக்கிறீர்களே. எனக்கு தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு துரித உணவுகள் கொடுப்பது தீங்கானது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் என் குழந்தையை துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் செல்லவில்லை. இவ்வாறு அழைத்துச் செல்வது உங்களுக்கு தெரிந்த, உலகில் உள்ள மற்றவர்களின் பணியாகத்தான் இருக்கும். மற்றவர்களை காட்டிலும் என் மகனை நான் கவனமாக பராமரித்து வருகிறேன். மேலும் நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீஷியன் அல்ல. அவர்களுக்கு நான் தாயோ, ஆசிரியரோ அல்ல என்பதை உணருங்கள். அவர்கள் எப்போது விழிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள் என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறைக்கு நன்றி’ என கூறியுள்ளார்.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.