Idhayam Matrimony

தண்ணீர் பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புதன்கிழமை, 19 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்க முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்க முடியாதது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று . தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்தை வேறு மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என மீனவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றுவது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களுடன் விவாதிக்க வேண்டும் என  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து