முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்ற தாயை சித்ரவதை செய்து கொன்ற இந்தியர் துபாயில் கைது

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : துபாயில் பெற்ற தாயை 4 மாதங்களாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கொன்ற இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துபாயில் வசிக்கும் 29 வயதுடைய இந்தியர் திருமணமாகி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவரது தாய் கடந்த ஆண்டு இவருடன் சேர்ந்து இருப்பதற்காக வந்துள்ளார். மகனுடன் தங்க வந்த அவருக்கு பல்வேறு கொடுமைகள் மகன், மருமகளால் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் நடந்ததை நேரில் பார்த்த அதே குடியிருப்பில் வசிக்கும் இந்தியர், அந்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அவரது மகன், மருமகளை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட், ஜூலை 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அதுவரை தம்பதியை காவலில் வைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து