முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபையின் கண்ணியத்துக்கு ஊறு விளைவித்தால் நடவடிக்கை: பார்லி. சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ஒரு உறுப்பினரை கொண்ட கட்சியாக இருந்தாலும் பேச வாய்ப்பு தரப்படும் என்று பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,

சபையில் எந்த உறுப்பினரும் பதாகைகளை ஏந்தக் கூடாது. சபையின் மையப்பகுதிக்கு வரக் கூடாது. இதுபோன்ற அமளிகள், நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிப்பவை. தங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேறு வழிகள் உள்ளன. பதாகைகளை ஏந்துதல், சபையின் மையப்பகுதிக்கு வருதல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவேன். ஒரு உறுப்பினரை கொண்ட கட்சியாக இருந்தாலும் பேச வாய்ப்பு தரப்படும். கடைக்கோடி மனிதர்களுக்காகவும் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து