எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பதினெட்டாங்குடி, அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த செபாஸ்டியான் மகன் ஜெயபால், ராமநாதபுரம் - மதுரை நான்கு வழிச்சாலையில், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்திலிருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் வாகனமும், சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா (எ) சுரேஷ், தொண்டியைச் சேர்ந்த அமீர் அலி என்பவரின் மகன் செய்யது இப்ராகிம் மற்றும் சேகு உதுமான் ரிபாய் என்பவரின் மகன் அப்துல் கலாம் ஆசாத் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பா மகன் ராமச்சந்திரன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா என்பவரின் கணவர் முத்து (எ) சுப்பிரமணி சாலையை கடக்க முற்பட்ட போது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன்கள் செல்வன் பரணிதரன், செல்வன் தரணிதரன் மற்றும் பாலகிருஷ்ணன் மகன் செல்வன் பூவரசன் ஆகிய மூன்று சிறுவர்கள் ஏரியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் என்பவரின் மகன் அருண்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் ஜெயராஜ் மற்றும் பரசுராமன் மகன் அன்பரசு ஆகிய இருவரும் கோவில் தேர் ஊர்வலத்தின் போது, விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், முனியன்குடிசை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் செல்வன் வெற்றிவேல் மணல் திட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், கீரைக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (லேட்) மனைவி மல்லிகா வீட்டின் கழிவு நீர் தொட்டி அடைப்பை சரி செய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இணயம்புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை மகன் ராஜ் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்ற செய்தியையும், கிள்ளியூர் வட்டம், இணயம்புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த ஜெசித் மகன் நெல்சன் என்பவர் கட்டுமரத்தில் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் மகன் திருப்பதி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டை வட்டம், ராயபுரத்தைச் சேர்ந்த ஜான் மனைவி யாகுலமேரி பழவேற்காடு ஏரியில் படகு சவாரியின் போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், சிக்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் அசோக் கிணற்றை தூர் வாருவதற்கு கயிறு கட்டி கிணற்றில் இறங்கும் போது, மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.