எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ. 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் .
கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்கியுள்ளது. இதன்மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 48.6 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக் கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், கிருஷ்ணகிரி - அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பர்கூர் - அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 35 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வகக் கட்டிடங்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டிடங்கள், வேலூர் மாவட்டம், நரியனேரி - திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டிடங்கள், திருவண்ணாமலை - அரசு கலைக் கல்லூரியில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், நூலகம், கழிவறைக் கட்டிடங்கள் மற்றும் வடிகாலுடன் கூடிய அணுகு சாலை,
சென்னை - சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வியாசர்பாடி - டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஜார்ஜ் டவுன் - பாரதி மகளிர் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 45 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டிடங்கள், சேப்பாக்கம் - மாநிலக் கல்லூரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 360 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 90 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக் கட்டிடம், ஈரோடு மாவட்டம் - பெருந்துறை அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்கள் பணிமனை மற்றும் இதரக் கட்டிடங்கள், கோயம்புத்தூர் - அரசு பொறியியல் கல்லூரியில் 15 கோடியே 50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய விடுதிக் கட்டிடங்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 48 குடியிருப்புகள் மற்றும் கலந்தாய்வுக்கூடம், மேட்டுப்பாளையம் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள்,
கோயம்புத்தூர் - பாரதியார் பல்கலைக்கழகத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மைய கருவிமயமாக்கல் வசதிகள், நீச்சல் குளம், அறிவியல் ஆய்வகம் மற்றும் மகளிர் விடுதிகளுக்கான பொது உணவுக்கூடம், திருப்பூர் மாவட்டம் - அவினாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள், திருப்பூர் - சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள்,
திருவாரூர் - திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கும்பகோணம் - அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு - அரசு கல்வியியல் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 33 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள், கடலூர் மாவட்டம், சிதம்பரம் - அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் - பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 27 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள்,
நாமக்கல் - அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குமாரபாளையம் - அரசு கல்வியியல் கல்லூரியில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 40 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 10ஆய்வகக் கட்டிடங்கள், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முசிறி - அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டிடங்கள், திருச்சிராப்பள்ளி - பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக் கட்டிடம் மற்றும் மைய கருவிமயமாக்கல் ஆய்வகக் கட்டிடம், கரூர் மாவட்டம், குளித்தலை - அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரூர் - அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 26 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள், திண்டுக்கல் - எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நிலக்கோட்டை - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள்,
மதுரை - ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மேலூர் - அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 25 கூடுதல் வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டிடங்கள், சிவகங்கை - இராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை - அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பூலான்குறிச்சி - வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரைக்குடி - அழகப்பா கலைக் கல்லூரியில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 43 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டிடங்கள், காரைக்குடி- அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு கோடியே 41 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டிடங்கள்,
ராமநாதபுரம் - சேதுபதி அரசு¬ கலைக் கல்லூரியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம்- புத்தூர், சீனிவாசா சுப்புராய பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனைக் கட்டிடம் என மொத்தம் 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன், கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜோதி வெங்கடேசுவரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.