எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை - கன்னியாகுமரி இடையேயான இரட்டை அகல ரயில் பாதை திட்டப் பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் செல்வம், முதுநிலை தலைவர் இரத்தினவேல் மற்றும் மதுரை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராம் பாபு ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் டெல்லியில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
அதில், மதுரை-கன்னியாகுமரி இரட்டை அகல ரயில்பாதைத் திட்டப் பணிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் மதுரை -கன்னியாகுமரி இடையே திட்டப் பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வெறும் அறிவிப்போடு திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்திட்டம் முழுமையாக விரைவில் நிறைவேற்றப்பட்டால்தான் தென் தமிழக மக்களுக்கு திட்டத்தின் பயன்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறும். எனவே மதுரை-கன்னியாகுமரி பிரிவில் திட்டப் பணிகள் மேலும் காலதாமதமின்றி துவங்கப்படவும் விரைவில் நிறைவேறவும் 2019-2020 ரயில்வே பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
2009-2010-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் ரூ. 150 கோடி மதிப்பீட்டுடன் அறிவிக்கப்பட்டு மீட்டர் கேஜ் பாதை மூடப்பட்டது. மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக 20 சதவீத திட்டப் பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 240 கோடி அளவிற்கு வேளாண் உற்பத்திப் பொருட்களும் பிற சரக்குகளும் இப்பகுதிகளில் இருந்தும் பிற பகுதிகளுக்கும் சாலைப் போக்குவரத்து மூலம் அனுப்பப்படுகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்போக்குவரத்தில் பெரும் பகுதி ரயில் மூலம் நடைபெறும். திண்டுக்கல்-கோட்டயம் இடையே தேனி, போடிநாயக்கனூர், கம்பம், குமுளி வழியாக அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும். திண்டுக்கல்-கோட்டயம் இடையே தேனி-போடிநாயக்கனூர்-கம்பம்-குமுளி வழியாக ரூ. 473.89 கோடி மதிப்பீட்டில் 123 கி.மீ நீளம் உள்ள அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுவதின் மூலம் நாட்டின் இரு முக்கிய துறைமுக நகரங்களான தூத்துக்குடிக்கும் மற்றும் கொச்சிக்கும் இடையே நேரடியான ரயில் தொடர்பு ஏற்படும். தமிழகத்திற்கும் குறிப்பாக தென் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே சரக்குப் போக்குவரத்து அதிகரித்து தொழில் வணிகம் பெருகும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
எனவே 2019-2020-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் அவை நிறைவேறிடச் செய்திட வேண்டும். மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய அகல இரயில்பாதைத் திட்டப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 2011-2012-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்புதிய ரயில்பாதை அமைக்கப்படுவது சென்னை-மதுரை-தூத்துக்குடி வழித்தடத்தில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு நிறைய சரக்கு ரயில்கள் செல்வதற்கும், தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் பின் தங்கி உள்ள அருப்புக்கோட்டை பகுதிகளில் தொழில் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறவும் பெரிதும் உதவும். திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை தென்னக ரயில்வே சமர்ப்பித்து விட்டது. எனவே 2019-2020-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் விரைவாக துவங்கி நிறைவு பெறச் செய்திட வேண்டும்.
மதுரைக்கும், பெங்களூருவிற்கும் இடையே பகல் நேர விரைவு இரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தற்போது தூத்துக்குடிக்கும், மைசூருக்கும் இடையே மதுரை மற்றும் பெங்களூரு வழியாக ஓடிக் கொண்டிருக்கும் விரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் - மதுரை - பெங்களூரு ரயிலில் பயணிகள் போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. எனவே மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையே பகல் நேர விரைவு ரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தற்போது நேரடியாக மதுரையிலிருந்து சென்னைக்கு காலையில் வைகை விரைவு ரயில், இரவில் பாண்டியன் விரைவு இரயில் ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் மதுரைப் பயணிகளுக்கு இடம் கிடைப்பதும் முன் பதிவு பெறுவதும் மிகவும் சிரமமாக இருக்கிறது. தென் மாவட்டஙகளில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் பிற ரயில்களில் குறைந்த அளவே மதுரைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. எனவே சென்னை-மதுரை இடையே இரட்டை அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றியவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
கொல்லம் - மதுரை விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். மானாமதுரை - பரமக்குடி, ராமேஸ்வரம், ராமேஸ்வரம் பகுதிகளில் உள்ள பயணிகள் நலன் கருதி கொல்லம் - மதுரை விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தென் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பயணிகள் நலன் கருதி ஜோத்பூர் - அகமதாபாத்-சென்னை, பீகானீர்-கோயம்புத்தூர், திருச்சி-மங்களூர் ஆகிய விரைவு ரயில்களை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த