முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. ஜி மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். இதன் பின்னர், ஒசாகா நகரில், பிரிக்ஸ் அமைப்பு தலைவர்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் கூடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர், தென் ஆப்ரிக்க அதிபர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பேசிய மோடி, பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

பயங்கரவாதத்தால், அப்பாவி மனித உயிர்கள் பலியாவதோடு, பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் ஆதரவை நாம் தடுத்த நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தை தடுக்க பிரிக்ஸ் நடுகள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து