முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக தொடர்ந்து செயல்படுத்த அமெரிக்கா தவிர 19 நாடுகள் உறுதி

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த அமெரிக்காவை தவிர ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றன.

குளோபல் வார்மிங் என்றழைக்கப்படும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்துவது என அமெரிக்காவை தவிர ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் தலைவர்களும் உறுதியேற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து