முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நேற்று பெய்தது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வடபழனி, கே.கே.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேப்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் எச்சரிக்கை...

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதியில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து