முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை - தென்ஆப்பிரிக்க ஆட்டத்தில் படையெடுத்த தேனீக்கள் - தப்பிய வீரர்கள்

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது தேனீக்கள் மைதானத்தில் படையெடுத்ததால் வீரர்கள் தரையில் படுத்து தப்பினார்கள்.

தப்பித்த வீரர்கள்...

இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 48-வது ஓவரின்போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படையெடுத்தது. தேனீக்கள் பிட்ச் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது. தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து