எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்கு ஆதரவாக உள்ளதால் அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு என்று திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அதிரடியாக பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள மறவன்குளம்,உச்சப்பட்டி,கப்பலூர்,மேலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டங்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டங்களுக்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆலொசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்தும்,எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அ.தி.மு.க.விற்கு 100சதவீத வெற்றியை பெற்றுத் தந்திடுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மறவன்குளம் கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது: மேடைகளில் பொய்யை மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் சொல்லிடும் பொய் உண்மையாக ஆவதற்கு காலம் எந்தவிதத்திலும் கைகொடுக்காது.தேர்லுக்கு முன்பு அப்படி நடந்துவிடும் இப்படி நடந்துவிடும் என்று.அவர் சொன்னபடி அப்படியும் நடக்கவில்லை இப்படியும் நடக்கவில்லை.அம்மாவுடைய அரசு தான் இன்றும் தொடர்கிறது. தேர்தலுக்கு பின்பு ஐந்து நாட்கள் அமைதியாக இருந்தார்கள்.தற்போது மீண்டும் பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு என்பது ஐந்து ஆண்டுகாலம்.அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் அம்மாவுடைய அரசு மக்களுக்கு முழுமையான சேவை செய்திடும்.ஆனால் அதற்கு முனபாகவே பல்வேறு இடைத்தரகர்களை நியமித்து ஆள்பிடிக்கிற வேலைகளை செய்து கொண்டு மேடையிலே பரிசுத்தமானவர் போல் ஸ்டாலின் பேசுகிறார்.அம்மாவுடைய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முதல்வர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் முதல்வர் எடப்பாடியார் மீதான நம்பிக்கை மக்களிடம் பெருகிக் கொண்டே இருக்கிறது.இந்த அச்சத்தினால் தான் அம்மாவுடைய அரசின் ஆயளை பற்றி அடிக்கடி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.அம்மாவுடைய உண்மை விசுவாசிகள் யாரும் புரட்சித்தலைவர் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.விற்கு போக மாட்டார்கள்.எனவே அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு.இந்த பேச்சிற்கு பதிலாக தனது செயலால் முதல்வர் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை பொருத்தமட்டில் பவமழை பொய்த்ததால் வந்த விளைவு.இதனால் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதுடன் பல்வேறு கட்ட வரலாற்று சிறப்புமிக்க குடிமராமத்து திட்டங்களை அம்மாவின் அரசுசெயல்படுத்தி வருகிறது.
அத்துடன் முந்தைய தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரத்தவறிய நல்லபல திட்டங்களையும் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.அம்மா இருந்தபோது இந்த 41சதவீத வாக்கு தற்போது 38.2சதவீதமாக உள்ளது.இதற்கு காரணம் துரோகி டிடிவியின் பொய் பிரச்சாரம் மற்றும் எதிர்கட்சியினரின் கோயபல்ஸ் பிரச்சாரம் அத்துடன் புதுகட்சிகளின் வரவு தான்.இந்த மும்முனை தாக்குதலை சமாளித்து இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை அம்மா அரசு பெற்றுள்ளது.தண்ணீர் பிரச்சனையை முன்வைத்து எதிர்கட்சியினர் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.இதனை முறியடித்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விவசாய கிணறுகள்,கூட்டுகுடிநீர் திட்டங்கள்,கடல்நீரை குடிநீராக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாகத்தான் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் முழமையடைந்தவுடன் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் பெருமளவு தீர்ந்திடும்.பல்வேறு தடைகளை தாண்டி மக்களின் பேராதரவுடன் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.20,22 என்று ஸ்டாலின் கணக்கு போட்டு வருகிறார்.அவரது கணக்கு தப்பு கணக்கு ஒருகாலும் அது கைகூடாது.தமிழக அரசு மேற்கொண்டு வரும் மாற்று நடவடிக்கைகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தி.மு.க ஆட்சியின் போது இருந்த சட்டம்-ஒழுங்கு பாதிப்பு,நில அபகரிப்பு,மின்தட்டுப்பாடு போன்றவை அம்மா ஆட்சியில் கிடையாது.இதனால் தான் மக்கள் அம்மா அரசுக்கு பாதுகாவலாக உள்ளனர்.எனவே தான் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தபடி மக்கள் ஆதரவுடன் அம்மாவுடைய அரசு இன்னும் நூறு ஆண்டுகள் அன்னைத் தமிழகத்தை ஆள்வது நிச்சயம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டங்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், போத்திராஜா, திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ரமாசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,திருமங்கலம் ஒன்றிய அவை தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,பழனிச்சாமி,ஆறுமுகம்,சிவஜோதி தர்மர்,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சதீஷ்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், சாமிநாதன்,நாகையாசாமி,எஸ்.பி.எஸ்.ராஜா,ஜெய.சி.செல்வகுமார்,சின்னன்,சாமிநாதன்,அழகர்,கல்லுப்பட்டி துணைச் செயலாளர் மீனாலட்சுமி,சின்னன்,பரமசிவம்,லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்;டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காங்கிரசுக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை: என் இறுதி ஊர்வலத்துக்கு வாருங்கள்: கார்கே உருக்கம்
25 Apr 2024பெங்களுரு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்ச
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.