முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து இன்று முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் திட்டமிட்டபடி ஸ்டிரைக்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

நாமக்கல் : எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து இன்று முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாஸை நிரப்பும் மையங்களுக்கு சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே இன்று காலை 6 மணி முதல் திட்டமிட்டபடி சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து