முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனுக்காக அலுவலகத்தை விற்கும் அனில் அம்பானி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை :  தனது நிறுவனத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தொழிலதிபர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.

2005 ம் ஆண்டு சகோதரர் முகேஷ் அம்பானியிடம் இருந்து சொத்துக்களை பிரித்த போது பெற்ற தெற்கு மும்பையில் உள்ள பல்லார்டு எஸ்டேட்டிற்கு தனது அலுவலகத்தை மாற்றவும் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.

சில நாட்களாக கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்து வரும் அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை கடனில் இருந்து காப்பாற்றுவதற்காக 700,000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள அலுவலகத்தை விற்க அல்லது நீண்டகால குத்தகைக்கு விட முன்வந்துள்ளார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்கள் நிறுவனத்தை நடத்துவதற்காக கடன் பெற்ற அனில் அம்பானி, கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்திற்காக தான் சிறைக்கு செல்வதை தவிர்க்கவும் சொத்துக்களை விற்று கடனை செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.

கடன் தொகை விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், கடன் தொகையை திருப்பி அளிக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டும் என அனில் அம்பானிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து