முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் 6-ம் தேதி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பா.ஜ.கவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் பா.ஜ.க. பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் அமித் ஷா, அதன் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் பாராட்டப்பட்டனர். எம்.பி.க்கள் மக்கள் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். இதனால் அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்று அறியப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி வரைவிற்குள்ளும் குறைந்தது ஐந்து மரங்களை நடவேண்டும் என்று பிரதமர் மோடி கட்சி தொண்டர்களிடம் கூறியுள்ளார். கட்சி எம்.பி.க்கள், யாராவது தங்கள் நடத்தை மூலம் கட்சிக்கு கெட்ட பெயரைக் கொண்டுவந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதி பிரதமர் மோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் தொடங்கவுள்ளார். இதேபோல், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெலுங்கானாவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிற கட்சித் தலைவர்களும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து